சனி, 21 மே, 2016

மருது _ தேவர் பெருமை பேசும் படமா?

தேவர் மகன் சிவாஜி சொல்லுவது போல நானும் அந்த கூட்டத்தில் ஒருவன் என்பதால் நியாயமாக கருத்து சொல்லலாம்
தேவர் பெருமையை கூறுவதாக நினைத்து கொண்டுள்ளனர் ..எனக்கு என்னவோ அவமானபடுத்துவது போல தான் தோன்றுகிறது
தேவர் சமுதாயதத்தில் கொலைகள் " நடந்தாலும் பெரும்பாலும் பங்காளிச் சண்டை, குடும்பப் பெருமை, ஊர்த் தகராறு போன்றவற்றிலே பெரும்பாலும் நிகழம்.. (இதையும் நான் ஆதரிக்கவில்லை ) தனி மனிதனின் அரசியல் வளர்ச்சிக்காக பெண்களை நடுரோட்டில் கொலை செயயும் கொடுரமான சமுகம் அல்ல.. அப்படி காட்டுவதால்  பெருமை கிடையாது அவமானம் மட்டுமே .. இப்படி  சிலர் இருந்தாலும் அது திரையில் காட்டுவதற்கான அவசியம் இல்லை
இந்த சமுதாயத்தில் லட்சகணக்கான பேர் தங்களது படிப்பினாலும், உழைப்பினாலும் நல்ல உயரங்களை அடைந்துள்ளனர் அந்த கதைகளை காட்சி படுத்தியிருக்கலாம்

பலம்
விஷால்  எத்தனை பேர் அடித்தாலும், நம்ப கூடிய அளவு  உடலை வைத்துள்ளார்,  Sriதிவ்யா, ஒரு சில நகைச்சுவை காட்சிகள்

பலவினம்
அருவருக்கதக்க கொலை காட்சிகள்,  எகனை மோகனை வசனங்கள்,   எரிச்சலூட்டும் விஷால் புகழ் பாடும் வசனங்கள்

படம்  முடிந்தவுடன்  என்னுடன் திரைப்பத்திற்கு வந்த  வேறு சமுதாயத்தை சேர்ந்த நண்பன் "மச்சான் நீயும் வீட்ல நீயும் அரிவாள்  வெச்சிருக் கியா " என்று கேட்டது தான் மிச்சம்


1 கருத்து: