பெரும்பாலும் வார நாட்களில் எழுந்திருப்பது எனக்கு வேப்பங்காய் தான்.அதுவும் திங்கள் கிழமை கொடுமை யாக இருக்கும் ... பெரும்பாலும் சோர்வு , அயற்சி ....
ஆனால் குழந்தைகளின் உலகம் மிக சிறியது , அவர்கள் வீடு,அப்பா,அம்மா , பள்ளி, மிக சில மனிதர்கள்,தொலைகாட்சி,அவளவுதான் ..ஆனாலும் ஓவ்வரு நாளும், உற்சாகமாக எழுகிறார்கள், ஒவ்வரு நாளையும் மிக உற்சாகமாய் எதிர் கொள்கிறார்கள், ஒவ்வரு நாளும் எதோ ஒரு பரிசை தர போவது போலவும் , புதிய அனுபவத்தை தர தயராக இருப்பது போலவும் உணர்கிறார்கள் .. அது உண்மையும் கூட
குழந்தைகளிடம் நம்மிடம் கற்பதை விட நாம் அவர்களிடம் கற்க வேண்டியது அதிகம் உள்ளது போல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக