புதன், 7 டிசம்பர், 2016

அம்மாவிற்கு பின் ? என்ன செய்ய வேண்டும் அதிமுக ?

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு , இல்லையனில்   அனைவருக்கும் தாழ்வு.

காட்டில் ஒரு பசு கன்றுகுட்டிகளுடன் வசித்து வந்தது. தாய் பசு பல ஒநாய்கள் , காட்டு மிருகங்களிடம் இருந்து கன்று குட்டிகளை காத்து வளர்த்தது.. கன்று குட்டிகள் அச்சம், கவலையின்றி, எதிர்காலத்தை பற்றி எந்த பயமும் இல்லாமல் விளையாடின... ஒரு நாள் அந்த தாய் பசு  திடிரென இயற்க்கை எய்தியது. இனிமேல் தான் கன்று குட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டி வரும்.. இனி பல்வேறு ஒநாய்கள் வரும்.. கன்று குட்டிகள் ஒன்றாக இருந்தால் வேட்டையாட முடியாது என்று ஒவ்வொன்றாக ஆசை காட்டி , கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வேட்டையாட முயற்ச்சிக்கும்... ஒன்றாம் வகுப்பு கதை தான்.. ஆனாலும் இன்றைய சூழ்நிலைக்கு தேவையான கதை.....

 வலுவான தமிழிகத்திற்கு வலுவான அதிமுக தேவை... நாளை மதவாத, குடும்ப கட்சி,சாதிய கட்சிகளிடம் இருந்தும், கோடம்பாக்கத்தில் இருந்து நாட்டை ஆள கனவு காணுபவர்களிடம் இருந்தும்  இந்த மண்ணை காபாற்ற வேண்டும்...   அதற்கு இந்த இயக்கம் இன்றி அமையாதது.

அதிமுக தேவர், கவுண்டர், வன்னியர், தாழ்த்தபட்டவர் என எந்த ஒரு ஜாதிக்கான இயக்கம் அல்ல.. சமானியனையும் அமைச்சராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக அழுகு பார்த்த இயக்கம்.... புரட்சி தலைவரால் உருவாக்க பட்டு, புரட்சி தலைவியால் வலு பெற்ற இயக்கம்.
இரட்டை இலை சின்னம் மகத்தான பல வெற்றிகளை கண்ட சின்னம்... வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் , இன்னும்  ஒரு 1989 நமக்கு தேவையில்லை....
இன்று நீ பெரியவனா? நான் பெரியவனா? என்பதை விட அம்மா  மற்றும் புரட்சித் தலைவர் அவர்களின் லட்சியம் மற்றும் கனவுகள் பெரியவை..
நல்லதே நடக்கும் என நம்புங்கள்.. உங்களை தேடி வாய்ப்புக்கள் வரும்..

அம்மா நம்மிடம் விட்டு சென்றவை
- 4  1/2 ஆண்டு ஆட்சி காலம்
-  136 சட்டமன்ற உறுப்பினர்கள்
- 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள்
– 1.5 கோடி உறுப்பினர்கள் உள்ள இயக்கம்
- 8 கோடி தமிழர்களுக்கு இயக்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கை

தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று அவரது கனவுகளையும், லட்சியங்களையும்  நிறைவேற்ற  பாடுபட உறுதி ஏற்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக