வியாழன், 10 ஆகஸ்ட், 2017

அதிமுக அடுத்த கட்ட நகர்வுகள் என்ன?


அதிமுக  அடுத்த  கட்ட  நகர்வுகள் என்ன

இப்போது  டெல்லி  கட்டளையின் படி தினகரனை வெளியேற்றி  விட்டார்கள் . அடுத்ததாக  சசிகலாவும்  நீக்கபடுவார்.  எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுவார்கள் விரைவில்  பன்னீர்செல்வம் அணியும்  இணையும் . இரட்டை  இலையை திரும்ப  தருவார்கள். அதுபோல்  மத்திய  அமைச்சரவையிலும்  இணைவார்கள்.

உள்ளாட்சி தேர்தலில்  இவர்களை  மிரட்டி  30- 40 %  இடங்களை பிஜேபி க்கு வாங்குவார்கள். நாடாளுமன்ற  தேர்தலில்  20 இடங்களை  பிஜேபி பெறுவார்கள்.  இரண்டு டாடா  ஏஸ்  வாகனத்தில்  தமிழ்நாடு பிஜேபி கட்சியினர்  மொத்தத்தையும் ஏற்றி விடலாம்  . அந்த  கட்சிக்கு  பாடுபட்டு  உழைத்து அதிமுக  தொண்டர்கள்  வெற்றி  பெற  செய்ய  வேண்டும்.அதிமுக   தொண்டர்கள்  உழைப்பில்  வெற்றி  பெற்றால் சரி  இல்லை  என்றால் , தாமரையில் கட்சியை  இணைக்கும்படி  வலியுறுத்துவார்கள் ... மிரட்டலுக்கு  பயந்து  ஒன்றான  இவர்கள் இன்னொரு  மிரட்டலுக்கு பயந்து கட்சியை  பிஜேபியுடன்  இணைத்து விடுவார்கள்.

  3 1/2 வருடம்  சம்பாதித்து  விடுவார்கள்  மற்றபடி   அடுத்த  முறை  கவுன்சிலர்  பதவி  தேர்தலில் நின்றால்  கூட  அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு  வெற்றி   கிடைக்காது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக