அதிமுக அடுத்த கட்ட நகர்வுகள் என்ன
இப்போது டெல்லி கட்டளையின் படி தினகரனை வெளியேற்றி விட்டார்கள் . அடுத்ததாக சசிகலாவும் நீக்கபடுவார். எதிர்ப்பவர்கள் மிரட்டப்படுவார்கள் விரைவில் பன்னீர்செல்வம் அணியும் இணையும் . இரட்டை இலையை திரும்ப தருவார்கள். அதுபோல் மத்திய அமைச்சரவையிலும் இணைவார்கள்.
உள்ளாட்சி தேர்தலில் இவர்களை மிரட்டி 30- 40 % இடங்களை பிஜேபி க்கு வாங்குவார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 20 இடங்களை பிஜேபி பெறுவார்கள். இரண்டு டாடா ஏஸ் வாகனத்தில் தமிழ்நாடு பிஜேபி கட்சியினர் மொத்தத்தையும் ஏற்றி விடலாம் . அந்த கட்சிக்கு பாடுபட்டு உழைத்து அதிமுக தொண்டர்கள் வெற்றி பெற செய்ய வேண்டும்.அதிமுக தொண்டர்கள் உழைப்பில் வெற்றி பெற்றால் சரி இல்லை என்றால் , தாமரையில் கட்சியை இணைக்கும்படி வலியுறுத்துவார்கள் ... மிரட்டலுக்கு பயந்து ஒன்றான இவர்கள் இன்னொரு மிரட்டலுக்கு பயந்து கட்சியை பிஜேபியுடன் இணைத்து விடுவார்கள்.
3 1/2 வருடம் சம்பாதித்து விடுவார்கள் மற்றபடி அடுத்த முறை கவுன்சிலர் பதவி தேர்தலில் நின்றால் கூட அமைச்சர்களாக இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக