பாஜக இந்தியா முழவதும் தீண்டத்தகாத கட்சியாக இருந்த போது பாஜக வை கூட்டணியாக இணைத்து வெற்றி பெற்றது சிவசேனா ..இன்று சிவசேனாவிற்கே கொஞ்ச கொஞ்சமாக ஆப்பு வைத்து விட்டார்கள் பாஜகவினர் .பாஜக கூடாரத்தில் புகுந்த ஒட்டகம் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிருப்பவர்களை வெளிய தள்ளி விடுவார்கள்.
பாஜக அதிமுக இரு அணிகளையும் இணைத்து இரட்டை இலையை திரும்ப தந்து கூட்டணி வைத்து 2019 தேர்தலில் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள். அவர்களின் ஆலோசனைப்படியே நடந்தாலும் எப்படியும் 20 பாராளுமன்ற தொகுதிளை மிரட்டி வாங்குவார்கள் . பிறகு சட்ட மன்ற தேர்தலில் 80- 100 தொகுதிகள் என்று கொஞ்சம் கொஞ்சமாக அதிமுகவை தின்று தின்று பாஜக வளரும் .
சசிகலா குடும்பதிற்கு ஒட்டு விழாது என்று கழட்டி விடலாம் என்று சொல்லும் அமைச்சர்களே , பாஜக கூட சேர்ந்து மட்டும் லட்சக்கணக்கில் ஒட்டு வாங்க முடியுமா?
மாநில அதிமுக அரசை பாஜக தலைவர்கள் தாறுமாறாக விமர்சிக்கிறார்கள் ..ஆனால் தவறி கூட மத்திய அரசை விமர்சிக்க பயப்படுகிறார்கள் . இந்த நிலைமையில் சென்றால் அதிமுகவை தமிழக பாஜக வளர்ச்சிக்கு பலியிட தயாராக இருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் தொண்டர்களையும் , ஓட்டுக்களையும் தக்க வைக்க வேண்டுமானால் பாஜக எதிர்ப்பு நிலையே எடுபடும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக