செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை


பிக் பாஸ்  வீட்டில்  100 நாட்கள்  பல கேமெராகள் கண்காணிப்பில் , நடிக்க  முடியாமல் உண்மையான கேரக்டர் வெளிப்படுத்தி விடுகிறார்கள் ...
33 ஆண்டுகள்  ஒரே வீட்டில்   புரட்சி தலைவி  ஜெயலலிதா  போன்ற புத்திகூர்மையான, பல்வேறு  தரப்பு மக்களிடம்  பழகிய ,துரோகத்தை வென்ற,  பெண்மணியின் முன்  தொடர்ந்து  நடிக்க முடியுமா ? அங்கு  உண்மையான  நட்பும்  , அன்பும் , பாசமும் மட்டும்  இருந்ததால் தான்  திருமதி  சசிகலா  அவர்களால் நீடிக்க  முடிந்தது .

 
ஒரு  ராஜ்ய  சபா MP பதவிக்கு, 45 சட்ட  மன்ற  உறுப்பினர்களை  டெல்லியின் வியூகத்தில்  இருந்து  காப்பாற்ற  நூறாண்டு  கண்ட காங்கிரஸ் கட்சிக்கு நாக்கு  தள்ளுகிறது ..பிஹாரில்  இன்னும்  மோசமான  அடி ..... ஆனால்  டெல்லி யின் வியூகத்திற்கு  எதிராக ஒரு  மாநில  ஆட்சியையே  காப்பாற்றி  கொடுத்தவர்  சசிகலா .


இந்த  ஆட்சி  இருக்கட்டும் ,போகட்டும் , என்ன  வேண்டுமானால்  நடக்கட்டும் ..ஆனால்  அன்று டெல்லி வியூகத்தை  உடைத்து , ஜெயித்தவர்  அவர் அது  வரலாறு ..

சசிகலாவினால் முடிந்தது , காங்கிரஸினால் முடியவில்லை .
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக