திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இப்ப தெரியுது உங்களை எல்லாம் என் இப்டி நடுத்துனாங்கன்னு?

டிசம்பர் மாதம் ,அம்மா  இறந்து  16 ம் நாள், நீங்கள்  அனைவரும்  இணைந்து  சசிகலாவிடம்  நீங்கள்  , நல்லவரா , கெட்டவரோ ?, அம்மாவுடன்  33 ஆண்டுகள்  இருந்து  கழக  நிர்வாகத்தையும் , அம்மாவையும் கவனித்து  கொண்டு  இருந்திர்கள் ,இப்போது  அம்மா  இறந்து  விட்டார்கள் , நாங்கள்  ஒன்றிணைத்து  கழகத்தை  பார்த்து  கொள்கின்றோம் . எங்களுக்கு  பொது  செயலாளர்  யாரும்  தேவை  இல்லை , நாங்கள்  வழிகாட்டுதல்  குழு  அமைத்து  கட்சியை  பார்த்து  கொள்கிறோம்  என்று  கூறி  விலக்கி  வைத்து  இருந்தால் நீங்களும்  மானஸ்தர்கள் , ஒருவேளை  உங்களின் ஒற்றுமையை  பார்த்து  சசிகலாவே விலகி  இருந்து  இருப்பார் ..

ஆனால்  நீங்கள்  என்ன  செய்திர்கள் , மாவட்டம்  வாரியாக  தீர்மானம்  போட்டு  அம்மா  காப்பாத்துங்க , அம்மா  காப்பாத்துங்க என்று  போயஸ்  வீட்டில் முன்பு  அலறினீர்கள் ..

ஒவ்வருவரும்  கட்சியில் அடுத்தவர்  கை  ஓங்கி  விடக்கூடாது  என்று பொது  செயலாளர்  ஆகுங்கள்  என்று  கூறினீர்கள் . தீர்மானம்  இயற்றி    ஏற்று  கொள்ளுமாறு  கெஞ்சினீர்கள் .

பிறகு  ஒவொரு  அமைச்சராக  ஓபிஸ் டம்  சென்று கட்சி , ஆட்சி  ஒருவரிடம்  இருக்க  வேண்டும் என்று  அவரையும்  பதவி  விலக  வைத்தீர்கள் ..
ஒபிஸ்  பிரிந்த  போது  எல்லாரும்  அவர்கூட  போய்  அவரை  ஆதரித்து  இருக்கலாம் ..அதுவும்  செய்யல . அப்பவும்  அந்த  அம்மா  ஜெயிலுக்கு  போறதுக்கு  முன்னாடி  உங்களை  முதலமைச்சர்  ஆகவும்  ,அமைச்சர்  ஆக்கியும் சென்றார்கள் ..

அப்போது  எல்லாம்  சுய  புத்தி  இல்லாமல்  செய்திர்களா  ? இல்லை  இப்போதுதான்   டெல்லியில்  இருந்து  புத்தி  வாங்கி  வந்திர்களா ?

சும்மா  இருந்த  தேரை  இழுத்து தெருவில்  விட்ட  மாதிரி , வீட்டில் இருந்த  அந்த  அம்மாவை  கூட்டி  வந்து  பொது  செயலாளர் , முதல்வர்  ஆக்குகிறேன்  என்று சொல்லி ஜெயிலுக்கு  அனுப்பி.. இப்ப சசிகலா  யாரு ?தினகரன்  யாரு ன்னு  கேக்குறீங்க ??

உலக  நடிப்புடா  சாமி ? 
அப்ப  கூட  ஜெயலலிதா அம்மா ஏன்  இந்த  மந்திரி , கழக  நிர்வாகிகளை  அடிக்கடி  மாத்ரங்க ? காலிலேயே  விழுந்து  இருக்குமாறு வைத்து   இருந்தார்கள் என்று யோசிச்சேன் .... இப்ப  தெரியுது    உங்களை  எல்லாம்  என் இப்டி  நடுத்துனாங்கன்னு? 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக