அன்புள்ள அதிமுக தலைவர்களுக்கு ,
அண்ணா திராவிட முன்னேற்ற கழக கரை வேட்டி எழுதும் கடிதம் .. என்னை கட்டியவன் லட்சத்தையும் , கோடியையும் எதிர் பார்ப்பவனோ, இல்லை அமைச்சர் , சட்டமன்ற , பாராளுமன்ற , உள்ளாட்சி அதிகாரத்தை அனுபவிக்க நினைத்தவனோ அல்ல , இவன் கட்சியின் கடைநிலை தொண்டன். இவனுக்கு நான் ஒரு அடையாளம் . கரை வேட்டியை கட்டி விட்டால் அவனுக்கு மாற்று கட்சியை சேர்ந்த உறவினர்களோ ,நண்பர்களோ இரண்டாம் பட்சம்தான் .நான்தான் பிரதானம் . எனக்காக அனைவரிடமும் சண்டையிட தயாராகி விடுவான். உள்ளூர் மக்கள் பணிக்காக கரை வேட்டியுடன் சட்டமன்ற ,ஒன்றிய நிர்வாகிகளை சந்திக்கும் பொழுது தரும் சிறு மரியாதைதான் அவனது அங்கீகாரம்.
புரட்சி தலைவரால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் இணைந்து , தன் வாழ்க்கையை இயக்கத்துக்காக அர்பணித்தவன் அவன்..புரட்சி தலைவர் மறைவின்போது இரண்டாக உடைந்த போது கூட அவனுக்கு இயக்கம் இணையும் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அவனது நம்பிக்கை பலித்து புரட்சித்தலைவியால் இயக்கம் அசுர பலம் அடைந்தது. தேர்தல் தோல்விகள் எந்த நாளும் அவனது நம்பிக்கையை பாதித்தது இல்லை ..மீண்டு வருவோம் என்று தெரியும் ..
ஆனால் இன்று ஆட்சி இருக்கிறது ... ஆனால் அவன் நம்பிக்கை இழந்து கொண்டு இருக்கிறான்.. குரங்கிடம் அப்பம் பிரிக்க சென்ற பூனைகளின் கதையாகி கொண்டு இருக்கிறது இன்றைய அதிமுக வின் கதை ..உங்களின் சகோதர சண்டையை நீங்ள் பேசி தீர்த்து கொள்ளுங்கள் .. குரங்கிடம் சென்ற அப்பம் திரும்பி வராது என்பதை மனதில் வையுங்கள் .
இன்றும் இயக்கம் இரண்டாக இருக்கலாம் , மூன்றாக இருக்கலாம் , ஆனால் கரை வேட்டி கட்டிய தொண்டன் வேறு எங்கும் செல்லவில்லை . 4 ஆண்டுக்கு பிறகு ஆட்சி முடிந்து விடும். அதிகாரம் கையை விட்டு போய் விடும் ,நீங்கள் திரும்பி பார்க்கும் பொழுது அங்கு தொண்டர்கள் இருக்கமாட்டார்கள். என்னை கட்டிய தொண்டனை வேறு ஒரு வேட்டி கட்ட வைத்து விடாதீர்கள் .
நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து விரைவில் இணையுங்கள் , அப்போது புரட்சி தலைவர் , புரட்சி தலைவியின் காலத்தை போல் பெருமையுடன் கரை வேட்டியை கட்டி மக்கள் பணிக்காக தயாராக இருப்பான் என்னுடையவன் .
அன்புடன் ,
அதிமுகவின் கரை வேட்டி ..
நீங்கள் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து விரைவில் இணையுங்கள் , அப்போது புரட்சி தலைவர் , புரட்சி தலைவியின் காலத்தை போல் பெருமையுடன் கரை வேட்டியை கட்டி மக்கள் பணிக்காக தயாராக இருப்பான் என்னுடையவன் .
அன்புடன் ,
அதிமுகவின் கரை வேட்டி ..
நச்ச்ச்ச்
பதிலளிநீக்கு